08/12/2019

நண்பர்களே,

  • நான் பணியாற்றும் மருத்துவமனை வளாகத்தில் ஏற்கெனவே 3000 சதுர அடியில் ஒரு மூலிகைத்தோட்டம் உருவாக்கியுள்ளோம். அதில் 150க்கும் அதிகமான மூலிகைகள் உள்ளன. தற்போது 4000சதுரஅடியில் அடர்வனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 160க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

             இயற்கையை பாதுகாக்க பாடுபடும்  சுயநலமில்லா  ஆர்வலர்களின் அமைப்பு   அத்தி.
இந்த அடர்வனத்தை உருவாக்கியதிலும், தொடர்ந்து பராமரிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த அமைப்பின் முன்னோடியாக விளங்குபவர் மதிப்பிற்குரிய வானவன் அவர்கள். இவர் நம்மாழ்வார் விருது உள்ளிட்ட பல விருதுகள்  பெற்றவர்.
 அடுத்தபடியாக குறிப்பிடப்படவேண்டியவர் நனை அமைப்பின்  ஈஷ்வர் அவர்கள்.  மரக்கன்றுகள் தேவை எனக்கேட்டவுடன் தயங்காமல் இலவசமாக கொடுத்து உதவினார். நனை அமைப்பு சென்னையை பசுமையாக்க பாடுபடும் தன்னலம் கருதா இதயங்களின் கூட்டணி.
    இவர்கள் மட்டுமில்லை, அடர்வனம் உருவாக்க அனுமதி அளித்து, இடம் ஒதுக்கி கொடுத்து ஊக்குவித்த தலைமை மருத்துவர் மற்றும் மூலிகைத்தோட்டத்தையும் அடர்வனத்தையும் தன் உயிருக்கு நிகராக நேசிக்கும் சித்த மருத்துவ அலுவலர்  ஆகிய அனைவருக்கும் எனது வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

05/12/2019

நண்பர்களே வணக்கம்.
மீண்டும் உங்களை சந்திப்பதில் மனம் நிறைகின்றது. தொடர்ந்து பல விஷயங்களை குறித்த எனது கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன்.
நன்றி.

22/03/2016

நினைவஞ்சலி.

அன்பு நண்பர்களே,                                                           இன்று (22/3/16) காலை 7.28 மணிக்கு எமது அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய தோழர். T.S.குமார் அவர்கள்  66வது வயதில் தனது உயிர் இயக்கத்தை நிறுத்திக்கொண்டார். கடந்த பல மாதங்களாக அவர் உடல் நலமின்றி இருந்து வந்தார். BSNL துறையில் தொழில்நுட்பனராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர்.                                                                 தோழர். குமார்  மார்க்சியத்தினை தத்துவார்த்தமாக உள்வாங்கியவர். அதனால்தான் ஊசலாட்டமின்றி அவரால் நம்பிக்கையுடன் இருக்கமுடிந்தது. எப்போது பேச வேண்டும், எப்போது பேசக்கூடாது என்பதை துல்லியமாக அறிந்தவர். அமைப்புரீதியான பிரச்சினைகள், ஏற்றத்தாழ்வுகள் அவரை என்றும் பாதித்ததில்லை விவாதங்களை எப்படி நடத்தவேண்டும், கூட்டத்தை எப்படி கட்டுப்பாடுடன் வ்ழிநடத்தவேண்டும் என்பதை நடைமுறையில் போதித்தவர். எவரையும், எப்போதும் அவர்  கண்ணியக்குறைவாக நடத்தியதுமில்லை, பேசியதுமில்லை.                                            கம்பீரத்தின் பெயர் தோழர். குமார். கம்பீரம் என்றால் அவரது நடை, பேச்சு, அவரது உருவம், குரல், மீசை என அனைத்துமே கம்பீரம்தான்.  ஊர்வலங்களில்  தனது பேராண்மைமிக்க குரலொலியில் அவர் கம்பீரமாக எழுப்பும் முழக்கங்கள் வர்க்க உணர்வு, ஜனநாயக உணர்வு உள்ள எந்த ஒரு நெஞ்சத்தையும் தம் வசமாக்கிக்கொள்ளும். சொல்லும் செயலும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர் தோழர். குமார். தனது மகனின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதுடன் சிறப்பாக திருமணமும் செய்து வைத்தார்.                                                                                 மாற்றுமருத்துவத்தின் மீது அளப்பரிய நம்பிக்கை கொண்டிருந்தார். சித்தா,ஹோமியோபதி, அக்குபிரஷர் என அவரது ஆர்வம் பரந்த அளவில் இருந்தது.  பொதுவாக அன்றைய காலகட்ட மார்க்சியர்களில் அனேகர் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள். தோழர். குமாரும் அதற்கு விதிவிலக்கல்ல.  தொடர்ச்சியாக  சிகரெட்டை புகைத்து வந்ததால், அதுவே அவர் நோய்வாய்ப்படவும் காரணமாயிற்று. ஆனால் அவர் தனது உடல் வலியை, மன உளைச்சலை, என்றுமே வெளியிட்டதில்லை. மெளனமாகவே தனக்குள் அடக்கிக்கொண்டவர். சிறப்பு கவனத்தை அவர் என்றுமே கோரியதில்லை. அவர் நோய்வாய்பட்ட நாள் முதல் மரணித்த இந்த நாள்வரையில் அவரது மகன் திரு. விஜய், மற்றும் அவரது துணைவியார். திருமதி. விஜயலட்சுமி இருவரும் அவரை கவனித்துக்கொண்டவிதம் எல்லோரையும் பிரம்மிக்கவைத்தது. தோழர்.குமார் கொடுத்துவைத்தவர் என ஊரார் பேசிக்கொள்ளும் அளவுக்கு அவர்களது பராமரிப்பு இருந்தது.                                                           தோழர். குமார் தனது BSNL துறைரீதியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக பங்கேற்றவர். மார்க்சியத் தத்துவத்தின் மீது மலையளவு நம்பிக்கையுள்ளவர். தான் சார்ந்திருந்த மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்திற்கு தனது உறுதியான ஆதரவை வாழ்நாள் முழுவதும் தொடர்ச்சியாக வழங்கியவர். நம்பிக்கை, அமைதி, உறுதி இந்த வார்த்தைகளுக்கு உயிர்கொடுத்தவர், அதுவாகவே வாழ்ந்தவர். தோழரே என்ற விளிப்பை செவிமடுத்துக்கொண்டே மரணித்தவர்.                                                                                            தோழர். குமார் நீங்கள் மரணித்தது  உடல் அளவில்தான். மார்க்சியம் பற்றிய பேச்சு எங்கு ஒலித்தாலும் அங்கு உங்களது நினைவு படர்ந்திருக்கும். எங்கு இன்குலாப் முழக்கம் கேட்டாலும் உங்களது உருவம் மனக்கண்களில் நிழலாடுவதை தடுக்கமுடியாது.  உங்களது நினைவு நீடூழி வாழ்க.                                                                                                                     

18/03/2016

செய்யாமல் செய்விப்பவர்.

எனது குருநாதர் சாமி, அழகப்பன் அவர்களை தமிழ்ச்சமூகம் நன்கறியும். அவரது மச்சமுனி வலைதளம் நல்வாழ்வுக்கோர் பேரகராதி. சித்த மருத்துவத்தினை பாமரனும் அறியும் வண்ணம் எடுத்துரைக்கும் அற்புத அரிச்சுவடி. எளிய தமிழில் அழகுற அவர் விளக்கி எழுதும்  பதிவுகள் நெஞ்சத்தை அள்ளி அறிவுவாசலை திறக்கும்.                                                                                                                                                அக்குபங்சர் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். வர்மக்கலையினை பழுதறக் கற்றவர், சித்தமருத்துவ பரம்பரையின் ஒன்பதாவது தலைமுறையைச் சேர்ந்தவர். ஆழமான தமிழ் இலக்கிய புலமையுள்ளவர். இன்னும் எத்தனையோ சிறப்புகளை சொல்லிச்செல்லலாம். எனினும் சிறப்பாக சொல்லவேண்டுமெனில் அவர் பற்றறுத்த மாமனிதர். பந்தம், பாசம், பணம், பதவி, புகழ் என எதுவொன்றாலும் பாதிக்கப்படாதவர். ஆனால் அவரது மனத்தை உங்களது பணிவாலும், சேவைமனப்பான்மையாலும், கற்கும் ஆர்வத்தாலும் மட்டுமே கவர முடியும். அப்படி கவர்ந்துவிட்டால் அதற்குப்பிறகு நீங்கள் ஒன்றும் செய்யவேண்டியதில்லை. உங்களுக்கு வேண்டிய ஞானம், உதவி,  தக்க தருணத்தில் தக்கவர்கள் மூலம் தானாக வந்து சேரும். செய்யாமல் செய்விக்கும் ஆற்றல் மிக்கவர்.                                                                                                                                                                            அவருக்கு மாபெரும் நோக்கங்கள் உண்டு. அவற்றை தனது பதிவுகளில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றார். அவைகள் கூடியவிரைவில் கைகூடும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.                                                                                                                                                                                                                                                                                                                                                                           அவர் எனக்கு அறிமுகமானதும், குருவாக வாய்க்கப் பெற்றதும், அவரது மனதில் இடம் பிடித்ததும் எனது வாழ்க்கையின் பாதையையே மாற்றி அமைத்துவிட்டது. எனது குண நலன்களை மேம்படுத்தியுள்ளது. எல்லையற்ற ஞானக்கடலின் கரையோரத்தில் குழந்தையாய் நிற்கவைத்து பிரம்மிக்கவைத்துள்ளது. அதேசமயம் தேவையானவை தேடாமல் தேடிவரவைத்துள்ளது. நிச்சயமாக ஒன்றை உறுதியாக கூறமுடியும், அவரை சந்திக்கும் முன் இருந்த தி,ஸ்ரீ, இப்போது இல்லை. நிறைய மாற்றியுள்ளார். அவரது வழிகாட்டலில் இன்னும் அதிக தூரம் பயணப்பட வேண்டியுள்ளது. நல்ல நண்பர்களை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். அவர்களது ஒத்துழைப்போடு அவர் காட்டும் பாதையில் வெற்றிகரமாக பயணப்படுவேன். நன்றி குருவே.

15/03/2016

எனது கதைகளின் தொகுப்பு.

நண்பர்களே,  எனது வலைப்பூவில் பதிவாகியிருந்த எனது கதைகள், மடிகணிணியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக முழுவதுமாக காணாமல் போய்விட்டது. சில நண்பர்கள் உதவியதில் சில கதைகளை மீட்க முடிந்தது. என்னிடம் அசல் பதிவு இல்லை.                                                                                                                                                              ஆனால் அதிர்ஷ்ட வசமாக எனது கதைகள் அனைத்தையும்  http://www.sirukathaigal.com/எனும் வலை தளம் முழுமையாக வெளியிட்டுள்ளதால்,  அதில் கதையாசிரியர்கள் என்ற தலைப்பில் தி.ஸ்ரீ. யை தேடி சொடுக்கினால் எனது கதைகள் அனைத்தும் வாசிக்கக்கிடைக்கும், நண்பர்கள்   வாசித்து கருத்தை தெரிவிக்கக் கோருகின்றேன்.

14/08/2015

ஜிம்மி


                                       எங்கள் லோகநாதன் காலனி பயப்டும் ஒரே விஷயம் ஜிம்மிதான். வங்கியில் வேலை பார்க்கும் சோமுவின் வீட்டு நாய்தான் இந்த ஜிம்மி. மருத்துனையை ஒட்டியுள்ள வீட்டில்தான் சோமு குடியிருந்தான்.


மருத்துனைக்கு தினம்தோறும் பத்து நோயாளிளையாவது கூடுலாக அனுப்பி வைப்பதை ஜிம்மி ஒரு சேவையாகவே பொறுப்புடன் செய்து வந்தது.


இத்னைக்கும் ஜிம்மி நாட்டுநாய்தான். ஆனாலும் சோமு வீட்டார் அதைக் கொஞ்சும்போது பார்க்க வேண்டுமே,​​ உலகத்திலேயே உயர்ந்த ஜாதி நாய்களை வைத்திருப்போர் கூட இப்டிக் கொஞ்மாட்டார்கள். காலனியின் மத்தியில் உள்ள தெருவாகப் போய்விட்தால் எங்ளால் ஜிம்மியைத் தவிர்க்கவே முடிவில்லை. காலையிலும்,மாலையிலும் ஜிம்மியிடம் அர்ச்னையைப் பெறாமல் எவராலும் தப்பவே முடியாது. வெளியே செல்லும்போது சகுனம் பார்ப்பது உங்கள் ஊர் பழக்மாக இருக்லாம். எங்கள் ஊர் கதையே வேறு. ஜிம்மி தெருவில் தென்டுகிறதா இல்லையா என்று பார்த்த பிறகுதான் எங்கள் பாதங்கள் தெருவில் பதியும்.





எங்கள் காலனிக்குள் போலீசே வந்தில்லை. எல்லாம் ஜிம்மியின் கைங்ரியம்தான். எங்கள் காலனி பெண்ளுக்கும்,​​ ஆண்ளுக்கும் திருணம் ஆவது குதிரைக் கொம்பாக இருந்தது. இதுவும் ஜிம்மியின் புகழ் அவனியெங்கும் பரவிதால்தான். திருணம் ஆகவேண்டுமென நவகிகங்களை வலம் வந்து வேண்டிவர்ளெல்லாரும் தவறாமல் ஜிம்மி குறித்த புகார்ளையும் கடவுளின் காதில் போட்டு வைத்தார்கள். தபால்காரர் கூட ஜிம்மியின் பார்வையில் இன்று தப்பித்தால் மறக்காமல் மாலையில் வீடு திரும்பும்போது தேங்காய் உடைப்தாக வேண்டிக் கொள்வார் என்றால் இதற்கும் மேல் ஜிம்மியின் பெருமையை சொல்வும் வேண்டுமா என்ன?


ஜிம்மியின் திருவாயால் கடிடாவர்கள் சோமுவின் குடும்பத்தினர் மட்டுமே. இரவு நேரத்தில் ஜிம்மிக்கு குஷி கரைபுரண்டோடும். தனக்குத் தெரிந்த அனைத்து ராகங்ளிலும் குரைத்துத் தீர்த்துவிடும். நாங்கள்தான் ராத்தூக்கம் கெட்டு பகலில் போதை வயப்பட்வர்கள் போல நடமாடிக் கொண்டிருப்போம்.


சோமுவிடம் ஜிம்மியைப் பற்றி ஊரே புகார் கூறிய போது,​​ துளி கூட அலட்டிக் கொள்ளாமல்,​​ ""உங்க பாதுகாப்புக்காக கறுப்புப் பூனையையா வளர்க்க முடியும்?'' என்று நக்டித்தான். கிட்டத்தட்ட சோமுவின் முகரியாவும்,​​ கௌரமாவும் ஜிம்மி மாறிவிட்டது. ஊரார் தன் மீதுள்ள பொறாமையால்தான் ஜிம்மியை குறை கூறுதாக நினைத்துக் கொண்டான். நகராட்சிக்கு எழுதிப்போட்டும் பலனேதுமில்லை. நகராட்சியின் ஊழியர்கள் அனைரும் சோமு வேலைப்பார்க்கும் வங்கியில்தான் கணக்கு வைத்துள்னர். போதாக்குறைக்கு இப்போதெல்லாம் சம்ளம் கூட வங்கி மூலமாகத்தான் அவவர் கணக்குளில் போய்ச் சேருகிறது. கேட்கவா வேண்டும்? சோமுவின் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்லும் வக்கீலாக அல்லவா மாறிவிட்டார்கள். பின் யாரிடம்தான் இக்குறையை முறையிடுவது?


இரவு வேளைளில் உணவு உண்ணும் போது கிசுகிசுக்க ஆரம்பித்து,​​ பின் மெதுமெதுவாக ஊருக்கு வெளியே கூடிப் பேசும் அளவுக்கு துணிச்சல் பெற்ற இளைஞர்கள் சிலரால் வெற்றிரமாக ஒரு சதித் திட்டம் உருவாக்கப்பட்டது. காலனியின் சுதந்திரம் பற்றிய கனவுளுக்கு இறகு முளைத்து ஊர் முழுக்க சுற்றி வரலாயின. ஜிம்மியை ஒழித்துக் கட்டிய பின்னர் ஊர் எவ்ளவு நிம்தியாக இருக்கும் என்பதை கற்பனை செய்து புளகாங்கிதம் அடைந்தோம். ஜிம்மியின் நடடிக்கைகள் வேவு பார்க்கப்பட்டன. நாள் முழுக்க அதன் நிகழ்ச்சி நிரல் என்னென்வென்பது எங்ளுக்கு அத்துப்டியாகிவிட்டது. அதன் குரைப்பின் தொனியை வைத்தே மாட்டியது உள்ளூரானா,​​ வெளியூரானா என்தைக் கணிக்கும் அளவுக்கு தேறிவிட்டோம்.


ஜிம்மி என்னவோ நாட்டு நாய்தான். ஆனாலும் அதன் தோரணை வெளிநாட்டு புசுபுசு நாய்க்கும்கூட வாய்ப்பது கடினம். அப்படி ஒரு கம்பீரம்,​​ லாகவம். தெருவில் அது லாந்தும் போது பார்க்க வேண்டுமே,​​ அடடா,​​ ஒரு சிங்கத்தின் கம்பீரத்தோடு அது உலா வரும் அழகே அழகு. எதிரியையும் பாராட்டும் அளவுக்கு பண்பாடுமிக்வர்கள் எங்கள் காலனிவாசிகள். ஜிம்மியின் மீது ஒரு "அட்டாக்' தொடுப்தென இளவட்டங்கள் முடிவெடுத்போது பெருசுகள் தடுக்வில்லை.


சரியான தருணம் பார்த்து காத்துக் கிடந்த போது,​​ ஒரு நாள் சோமு குடும்பத்தினர் கோயிலுக்கு மொட்டைப் போட சென்ற செய்தி வாட்மாய் வந்து சேர்ந்தது.


உடனே செயலில் இறங்க முடிவெடுத்தோம். தெருவின் இரு பக்கத்திலும் ஆட்களை நிற்க வைத்து,​​ சோமுவின் வீட்டை மெதுவாக முற்றுகையிட்டோம். மன்னர்கள் காலத்தில் போருக்குச் செல்லும்போது என்னென்ன ஆயுதங்கள் எடுத்து சென்தாக சொல்லப்பட்டதோ,​​ அதற்குச் சற்றும் குறையாத ஆயுதங்ளோடுதான் ஜிம்மியின் மீது படையெடுத்தோம். எல்லா பந்தாவும் ஜிம்மியைப் பார்க்கும் வரையிலும்தான். படுத்துக் கொண்டிருந்த ஜிம்மி எங்கள் சத்தத்தைக் கேட்தும் சிவுக்கென எழுந்து படக்கெனப் பாய்ந்து வந்து முதல் தெரு சீதாதியை மூர்க்மாய் ஒரு கடி கடித்துதான் தாமதம்,​​ ஏந்திய ஆயுதங்களை அப்டியப்டியே போட்டுவிட்டு,​​ கூடிய கும்பல் ஒரு நொடியில் பறந்து விட்டது.


இந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஜிம்மியின் கோபம் எல்லை மீறிப் போய்விட்டது. தன்னை அடிக்கத் திட்மிட்வர்களை தேடித் தேடி கடிக்க ஆரம்பித்துவிட்டது. ஜிம்மியின் கோபத்திலிருந்தும்,​​ பழிவாங்கலிலிருந்தும் எப்படி தப்பிப்பது என்பதே உடடிப் பிரச்னையாகிவிட்டது. பொறை,​​ சமோசா என ஜிம்மிக்கு ஆசைக்காட்டி தன் பக்கம் இழுக்கப் பார்த்தும் பலனில்லை. இறுதியாக ஜிம்மியின் நிகழ்ச்சி நிரலை அனுரித்து எங்ளது வெளி வேலைகளை முடித்துக் கொள்ளப் பழகி கொண்டோம்.


காலனியின் பிள்ளைளுக்கு பெற்வர்கள் ஏதேனும் வேலை வைத்தால் ஜிம்மி பேரைச் சொல்லி தப்பித்துவிடுவார்கள். பிள்ளைகள் சோம்பேறிளாக வலம் வருவதை காண்கின்ற வருத்தம் ஒரு பக்கம்,​​ சொந்தக்காரர்கள் எவரும் வருதில்லையே என்கிற வருத்தமோ இன்னொரு பக்கம்,​​ ஏற்னவே குடியிருந்வர்ளும் காலி செய்து கொண்டு காலனிக்கே பெரிய கும்பிடு போட்டுவிட்டு சென்றுவிட்தால்,​​ வாடகைக்கு யாராவது வரமாட்டார்களா என்ற ஏக்கம் மறுபக்கம் என காலனியே சோகத்தில் ஆழ்ந்து போனது. இதைவிடக் கொடுமை என்வென்றால்,​​ காலனிவாசிளுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ளக்கூட எந்த ஊரும் தயாராக இல்லை.


அன்றைய காலைப்பொழுது உண்மையாகவே காலனிவாசிளுக்கு நல்ல செய்தியுடன்தான் விடிந்தது. சோமுவை பெங்ளூருக்கு மாற்றிவிட்டார்ளாம். இதைத் தானே இத்தனை நாள் எதிர்பார்த்திருந்தோம். பட்டாசு,​​ தாரை தப்பட்டை எல்லாம் தயார்,​​ சோமுதான் இன்னும் கிளம்பிய பாடாக இல்லை. மேலிடத்தில் போய் இந்த மாற்றல் உத்ரவை எதிர்த்து முறையிட்தாவும்,​​ ஆனால் போட்ட உத்ரவு போட்துதான் என மேலிடம் கூறிவிட்தாவும்,​​ தகவல்கள் பியூன் ராமன் மூலம் கசிந்தன. அந்த நாளும் வந்தது. இருப்தையெல்லாம் வந்த விலைக்கு விற்றுவிட்டு,அத்தியாசிமானதை மட்டும் பார்சல் லாரியில் அனுப்பிவிட்டான் சோமு. டாடா சுமோ வாசலில் உறுமிக் கொண்டிருக்க,​​ சோமுவின் குடும்பம் மெதுவாக வெளியில் வந்து காரில் ஏறியது. மூச்சைப் பிடித்துக் கொண்டு இந்த இறுதி காட்சிளைப் பார்த்துக் கொண்டிருந்தோம். காரும் நகர ஆரம்பித்தது. நாங்ளும் இதைக் கொண்டாட தயாரான வேளையில்தான் அந்த விபரீதத்தை காண நேர்ந்தது. புழுதியை கிளப்பிபடி கார் போகிறது,​​ அதைத் துரத்திபடி ஜிம்மி ஓடுகிறது. சிறிது நேரம் கழித்துத்தான் எங்ளுக்குப் புரிந்தது,​​ ஜிம்மியை சோமு கைகழுவி விட்டான் என்பது.


எங்ளுக்கோ பெரிய குழப்பம் இப்போது என்ன செய்வது? காரைத் துரத்திபடி தெருமுனை வரை ஓடிய ஜிம்மி மீண்டும் திரும்பி வருதைப் பார்த்வுடன் கால்கள் வெடவெவென நடுங்க ஆரம்பித்தன. ஆனால் ஒரு ஆச்ரியம் பாருங்கள்,​​ நடுக்மிருந்தாலும் யாரும் நகவேயில்லை. ஜிம்மியும் நெருங்கி வந்து கொண்டிருந்தது. எங்கள் பையன்ளும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு தயாராக இருந்னர். ஜிம்மி ஏறெடுத்து யாரையும் பார்க்காமல் துக்கத்துக்குச் சென்று வந்த பெரிய மனிதர் முகத்தை எப்படி வைத்திருப்பாரோ அப்படி முகத்தை வைத்துக் கொண்டு பற்றற்ற ஞானியைப் போல வெறுமையான பார்வையுடன் நேராக சோமு குடியிருந்த வீட்டின் முன்னால் வந்து நின்று எல்லோரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அப்டியே சுருண்டு படுத்துக் கொண்டது. அதை அடிக்க ஓங்கிய கைகள் பெரிசுகள் எவரும் தடுக்காலேயே தயங்கி நின்றன. எங்ளைக் காலம்காமாய் பயமுறுத்திக் கொண்டிருந்த ஜிம்மியல்ல இது. அதனுடைய நிலைமை எங்களை என்னமோ செய்தது. சோமுவின் சுயலத்தை நினைத்து காலனியே காறிதுப்பியது.


சோமு இங்கு குடிவந்தபோது பக்கத்து வீடு காலியாக இருந்தது. அதன் தாழ்வாரத்தில் ஒரு பெட்டை நாய் நான்கு குட்டிகள் போட்டிருந்தது. நைநையென்று அவைகள் போடும் சத்தம் சோமுவை எரிச்சல் படுத்த,​​ தடியை எடுத்துக்கொண்டு நாயை விரட்ட ஓடினான். இவன் சத்மிட்டுக் கொண்டே ஓடிருதைக் கண்டு தனது குட்டிகளை வாயால் கெüவிக் கொண்டு வேகவேமாக பக்கத்திலிருந்த புதரை நோக்கி ஓடியது அந்த பெட்டை நாய். ஆனால் சோமு வருதற்குள் அதனால் மூன்று குட்டிகளை மட்டுமே அப்புறப்டுத்த முடிந்தது. சோமு வந்து பார்க்கும் போது ஒரு குட்டி நாய் எழுந்து நிற்க முயற்சித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதன் கால்களோ தழைந்து தழைந்துப் போக அக்குட்டி நிற்முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்தைப் பார்த்த சோமு என்ன நினைத்தானோ சட்டென்று அதை வாரியெடுத்துக் கொண்டு கொஞ்லானான். அந்த குட்டி நாய்தான் இந்த ஜிம்மி. அருமை பெருமையாய் வளர்த்துவிட்டு இப்படி அம்போவென விட்டுவிட்டுப் போய்விட்டானே என காலனியே சோமுவை மண்வாரி தூற்றாத குறையாய் சபித்தது. போறது பெங்ளூரு இல்ல,​​ அதுதான் கெüரவ குறைச்சல்னு நாட்டு நாயை இங்கேயே விட்டுட்டுப் போயிட்டான் பாவிவன் புசுபுசுன்னு இருக்கிற வெளிநாட்டு நாயாக இருந்திருந்தால் இப்படி தெருவில் கிடாசிவிட்டு போயிருப்பானா என்று ஒரு பெருசு பொறுமியது. அவவர்ளுக்கென்று ஆயிரம் வேலைகள் காத்திருப்தால் கூட்டம் மெதுவாக கலைலாயிற்று.


சாப்பிட்டு முடித்து படுக்கப் போகும்போதுதான் ஒரு மாற்றத்தை கவனிக்க முடிந்தது. ஜிம்மியின் குரைப்பொலி கேட்வேயில்லை. நேற்று வரை அக்குரைப்பொலி நாரமாய் என்று ஒழியுமிந்த இம்சையென தோன்றியது. இன்றோ ஜிம்மியின் குரைப்பொலி கேட்காதது ஏதோ ஒன்று குறைந்து போனது போல தோன்றியது. இந்த விந்தையை எண்ணிடியே காலனி உறங்கிப் போனது. காலைப்பொழுது இப்பொழுதுதான் உண்மையான காலைப் பொழுதாக காலனிவாசிளுக்குத் தோன்றியது.


ஜிம்மியின் அட்காசம் இல்லாத,​​ அமைதியான வாழ்க்கை இன்று முதல் துவங்குகிறது. ஜிம்மியைப் பார்த்துலாமென ஊரே கிளம்பிவிட்டது. நேற்று மாலை எங்கு படுத்துக் கிடந்ததோ அதே இடத்தில்தான் இப்பொழுதும் இருந்தது. தலையை முன்னங்கால்ளுக்கிடையில் புதைத்துக் கொண்டு படுத்துக்கொண்டிருந்தது. காதுகள் மடிந்து தொங்கட்டான் போல தொங்கிக் கொண்டிருந்தது. பழைய கோபம் மக்ளுக்கு சட்டென்று மாயமாகிவிடுமா என்ன? நாலு பக்கத்திலிருந்தும் பல்வேறு தினுசான கற்கள் மடவென ஜிம்மியின் மீது பொழியத்தொடங்கின. ஜிம்மி லேசாக தலையைத் தூக்கிப் பார்த்தோடு சரி,​​ தண்னையை நேருக்கு நேராய் சந்திக்கும் நெஞ்சத்துடன் அமைதி காத்தது. எல்லாம் சிறிது நேரம்தான். ஜிம்மியின் மீதிருந்த கோபம் எங்கு போயிற்றோ? பக்கத்து வீட்டுப் பெண் கொஞ்சம் சாதம் எடுத்துக் கொண்டு வந்து ஜிம்மியின் முன்னால் தயங்கிடியே வைத்தாள். அதை முகர்ந்து கூடப் பார்க்காமல் தலையை தனக்குள்ளாக புதைத்துக் கொண்டது. குற்வுணர்வு மேலிட கூட்டம் மௌனமாக கலைந்து போனது.


நாட்கள் பறந்த வேகத்தில் லோகநாதன் காலனிவாசிகள் ஜிம்மியை மறந்துப் போனார்கள். ஜிம்மியை கூட முன்பு மாதிரி காலனிப் பக்கம் பார்க்முடிவில்லை. இரவு நேரத்தில் சாப்பிட்டு முடித்வுடன் கையை தட்டில் கழுவ என் தந்தை அனுதிக்மாட்டார். தட்டில் கொஞ்சம் சாதத்தை மிச்சம் வைத்து,​​ அதை வீட்டு வாசலில் ஓரமாவுள்ள கல்லின் மீது கொட்டி,​​  ஜூ.. ஜூ..வென நாய்களை கூப்பிட்டு சாப்பிட வைக்க வேண்டும். அதன் பிறகுதான் அப்பாவுக்கு ஏப்பமே வரும். அப்பா காலமாகி பதினைந்து வருடங்ளாவிட்டது. காலம் மாறிவிட்டது. விலைவாசி ஏற்றம் மனிதர்களை மட்டுமா பாதித்துள்ளது. நாய்ளையும்தான் கடுமையாக பாதித்துள்ளது. முன்பு மாதிரி யாரும் தட்டில் மிச்சம் வைப்துமில்லை. மிச்மாகுவுக்கு சமைப்துமில்லை. சிந்தும் பருக்கையை ஊசியால் குத்தி தண்ணீரால் அலசி சாப்பிடும் காலத்தில் நாய்ளுக்கு எங்கே சாப்பாடு கிடைக்கும்? தட்டில் கையை கழுவும் போதெல்லாம் அப்பாவை நினைத்துக் கொள்வேன். கூடவே தவிர்க்க முடியாமல் ஜிம்மியின் ஞாபமும் வந்துவிடுகிறது. இப்போதெல்லாம் ராப்பிச்சை கேட்டு பிச்சைக்காரர்கள் கூட வருதில்லை. கடைவீதிளில் பிச்சை எடுப்தோடு அப்டியே போய்விடுகின்றார்கள். நாய்ளுக்கே அன்மிட யோசிக்கும் தேசம்,​​ பிச்சைக்காரர்ளுக்கா அன்மிடும்?


மருத்துனையிலும் முன்பு போல நாய்க்கடி ஊசிக்கு பெரிய அளவுக்கு வேலையில்லாமல் போய்விட்டது. அன்று எனக்கு ஓய்வு நாள். நண்பனை பார்த்து வரலாமென சென்றேன். போகும் வழியில் ஒரு அருமையான காட்சி. ஜிம்மியின் மீது நாலைந்து தெரு நாய்கள் விழுந்து புரண்டு விளையாடிக் கொண்டிருந்தன. ஜிம்மியோ மோன தவத்திலாழ்ந்திருந்தது. இதைக்காண எனக்கு ஆச்ரிமாகிவிட்டது. தனது தெருவுக்குள் வேறெந்த நாயாவது லேசாக தலைக்காட்டி விட்டால் போதும். ஜிம்மி தெருவையே கலவர பூமியாக்கிடும். ஊரடங்குச் சட்டம் போடப்பட்ட பகுதியாக கப்சிப்பென ஊர் அடங்கியொடுங்கிவிடும். வாலை பின்னங்கால்ளுக்கிடையில் சுருட்டிக் கொண்டு அந்த வெளி நாய் வெளியேறும்வரை இந்த அமளி அடங்கவே அடங்காது. அந்த ஜிம்மிதானா இதுவென என்னால் நம்வே முடிவில்லை.